Thursday 1 March 2012

ரசமலாய்

ரசமலாய்



தேவையான பொருட்கள்  :

பால் - 1 ltr ( பனீர் தயாரிக்க)
சர்க்கரை  - 1கப்
தண்ணீர் - 2 1/2 கப்
எலுமிச்சை சாறு அல்லது - 2 tbl.spoon
வெள்ளை வினிகர்
ஏலக்காய் பவுடர்  - 2 tbl.spoon
பால் - 3 கப்
சர்க்கரை  - 2 1/2 tbl.spoon
குங்கும பூ  - சிறிதளவு
பாதாம் - 3 tbl.spoon
பிஸ்தா - 2 tbl.spoon

செய்முறை :

ஒரு அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் சுண்ட காய்ச்ச வேண்டும்.பிறகு எலுமிச்சை சாறை பாலில் ஊற்ற வேண்டும்,உடனே பால் திரிய ஆரம்பிக்கும்போது அடுப்பிலிருந்து பாலை இறக்கி விடவும்.அடுத்து ஒரு மெல்லிய துணியில் திரிந்த பாலை வடிகட்ட வேண்டும்.நீர் இறங்கி பால் திரட்சிகள் துணியில் தங்கிவிடும்.அதை அப்படியே இறுக்கமாக கட்டி அதன் மேல் ஒரு கனமான பொருளை வைத்தால் மீதி நீரும் வெளியேறி விடும் .இதுவே பனீர்.பணீரை 1tspoon மைதா சேர்த்து நன்கு பிசைந்து கோலி வடிவத்தில் சிறிதாக உருட்டி கொள்ளவும்.பிரஷர் குக்கரில் சர்க்கரை, நீர் சேர்த்து பாகு வைத்து கொதிக்கும் நிலையில் பனீர் உருண்டைகளை போட்டு குக்கரை மூடி 3 விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.சுவையான ரசகுல்லா  தயார்.

ரசமலாய் தயாரிக்க 3 கப் பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து  சர்க்கரை ,குங்கும பூ மற்றும் ஏலக்காய் போட்டு பால் பாதியாக குறையும் வரை சுண்ட  காய்ச்ச வேண்டும்,பிறகு ரசகுல்லாவை  பாகிலிருந்து எடுத்து சிறிதளவு தட்டையாக உள்ளங்கையில் வைத்து அழுத்தி காய்ச்சிய பாலில் போட்டு அதன் மேல் பாதம்,பிஸ்தா இரண்டையும் மெல்லியதாக சீவி போடவேண்டும். ரசமலாய் தயார்.

No comments:

Post a Comment